Wednesday, March 31, 2010

எங்கே நீயும் நானும் அங்கே...

என் தெருவில் நாய் தொல்லை அதிகமாக இருந்தது.இப்போழுதுஎல்லாம் நாய் வண்டி வருவதில்லை. ஆகையால் நாய்கள் தன இனத்தை பெருக்கி கொள்ள வசதியாகி விட்டது. மாநகராட்சிக்கு போன் செய்தால் நாயை தூக்கி சென்று அறுவை சிகிச்சை செய்து திரும்பவும் அதே தெருவில் கொண்டுவந்து விடுகின்றனர்.

என் தெருவில் இருந்த ஒரு ஜோடியை பிரித்த பெருமை என்னை சேரும். ஆண் நாய் திரும்பி வரவில்லை ஆனால் பெண் நாய்க்கு அறுவை சிகிச்சை செய்து விட்டுவிட்டனர். சென்ற மழை காலத்தில் பல நாய்கள் எங்க தெருவில் வந்து "ஜல்சா" செய்து விட்டு சென்றது அனால் ஒரு குட்டியும் பெற்று எடுக்க வில்லை அந்த பெண் நாய். அது என்னை பார்கையில் அது எனக்கு சாபம் இடுவது தெரியுது. என்ன செய்வது தொல்லை என்று வந்து விட்டால் சும்மா இருக்க முடியுமா...........

Tuesday, March 30, 2010

வாங்கினால் மட்டும் போதுமா ....

நாய் வாங்கி அதற்க்கு ஒழுங்கா தீணி போடணும் இல்லையென்றால் அது வெளியில் தீணி தேட ஆரம்பிக்கும். இது நாய்க்கு மட்டும் சொல்லும் அறிவுரை இல்லை........

வண்டி வாங்கி விட்டு அதற்க்கு ஒழுங்காக சர்வீஸ் செய்ய வேண்டும் இல்லையேல் வெளியில் இருக்கும் மெக்கானிக் "வண்டியின்" பலவீனத்தை கொண்டு அவன் காசு பண்ணுவான்.

வாழ்க்கையில் வரும் புது புது வரவுகளை ஒழுங்காக "சர்வீஸ்" செய்து கொண்டு இருந்தால் நம் வீட்டு பொருள் வெளியே செல்ல சந்தர்பம் வராது.

Monday, March 29, 2010

என்ன மெட்டு ராஜா ராஜா தான் ......

எந்த காலத்தில் இருக்கிறோம்

சமீபத்தில் ஓஷோ புத்தகத்தில் படித்தது " குழந்தைகள் எதிர்காலத்தை நோக்கி இருப்பவர்கள் அனால் வயதானவர்கள் இழந்த காலத்தை நினைத்து நிகழ்காலத்தை இழக்கின்றனர்" . காரணம் குழந்தைகளக்கு இழந்த காலம் என்று ஒன்றும் இல்லை அனால் பெரியவர்களுக்கு எதிர் காலம் என்று இல்லை ஏனென்றால் மரணம் மட்டுமே நிச்சயம் .

Sunday, March 28, 2010

உச்சக்கட்டம்....

இரவு பத்து மணி இருக்கும் அவன் அவள் இருவரும் படுக்கையில்....... தீடிர் என்று அவன் படுக்கையில் இருந்து எழுந்து தன் தலை மீது கை வைத்து அழ தொடங்கினான் . அவளோ அவன் முதுகு மீது தன் கையை தடவி என்ன டார்லிங்! என் மீது கோபமா என்று மெல்லிய குரலில் கிசுகிசுத்தாள் . அதற்க்கு, அவன் ஒன்றும் இல்லை பாழா போன கரண்ட் கட் என்னை அப்செட் செய்து விட்டது.

அட பாவி ! நான் என்னமோ ஏதோ என்று நினைத்து பயந்து விட்டேன் என்று அவன் மீது தலையாணி விட்டு எறிந்தால் .

என்ன கதை பிடிச்சி இருக்கா ............

Saturday, March 27, 2010

எல்லாம் பயம் தான் ......

உனக்கு பயம் அதற்க்கு ஒரு துணை வேண்டும் . அவளுக்கு ஒரு பயம் அவளுக்கு ஒரு துணை தேவை. இரண்டு பயங்கள் சேர்ந்து மகழிசி கடலில் முழுகி முத்து எடுக்க இருக்கிறார்கள். எப்படி? பொருத்து இருந்து பார்?

சபரிமலைக்கு காட்டு வழியில் செல்லும் பக்தர்கள் சரண கோஷம் போட்டு கொண்டு மலை ஏறுவார்கள் ஒரு வகையில் அது பக்தி என்று சொல்லுவார்கள் ஆனால் ஒரு வகையில் அது பயம் இல்லாமல் காட்டு மிருகங்களிடம் மாட்டி கொள்ளாமல் இருக்க எழுப்பும் சப்தம்.

Thursday, March 25, 2010

நாளும் கிழமையும் .....

ஸ்ரீ ராம நவமி இரு தினங்களுக்கு முன் கொண்டாடப்பட்டது . ஸ்ரீ ராம நவமியின் சிறப்பே நீர் மோர் மற்றும் பானகம்மும் தான். பொதுவாகவே , நவமி மற்றும் அஷ்டமி நல்ல நாள் என்று கருதமாட்டார்கள். ஆனால் ஜென்மாஷ்டமியை கிருஷ்ன ஜெயந்தி என்றும் ஸ்ரீ ராம பிறந்த நாளை ராம நவமி என்றும் கொண்டாடுகிறோம்.

இது எதை காட்டுகிறது என்றால் எந்த நாளும் நல்ல நாள் தான். நாள் கிழமை பார்த்து வீணாக போவதை நிறுத்திக்கொள்ளுங்கள்.

யாரை தான் நம்பவதோ ........

மனிதனின் வாழ்க்கை ஒரு போராட்டம் . தினமும் ஒரு புது அனுபவம் நம்மை மேம்படுத்துகிறது . நீ உன்னை மட்டும் நம்பு அனாவசியமா கண்டவனை நம்பி ஏமாறாதே.

அழகான கனி சுவையுள்ள பழம் சுழிந்திருக்கும் ...

மிக அழகாக உள்ளதே என்று எந்த பொருள் எடுத்தாலும் அதில் மறைந்து இருக்கும் ஆபத்து நமக்கு உடனே புலபடுவதுயில்லை . கொஞ்சம் நேரம் கழித்து தான் அஹஆஹா நாம் வலையில் மாட்டிக்கிட்டோம் என்று தெரிய வருகிறது. அதனால் தான் அழகா அறிவா ன்று குழப்பும் வந்தால் அறிவுக்கு முக்கியம் கொடு.

Wednesday, March 24, 2010

தள்ளி போடு

ஒரு கெட்ட எண்ணத்தை மனது அளவில் எப்பொழுதும் தள்ளி போட்டு கொண்டே இருக்க வேண்டும். நாம் நம் மனதிற்கு ஆணை இட்டு கொண்டே இருக்க வேண்டும் இல்லையேல் மனது நம்மை கெடுதல் செய்ய தூண்டி கொண்டே இருக்கும் .

Tuesday, March 23, 2010

குப்பை என்று ஒதுக்காதே ....

குப்பை என்று நாம் தள்ளி விட்டது எல்லாம் பணம் கொழிக்கும் முறை. என்ன குழப்பமா இருக்கா ! மும்பை தாராவி யில் ஒரு வருட ஆருநூற்று ஐம்பது கோடி வியாபாரம் புழங்கிறது . குப்பையில் மின்சாரத்தை தயாரிக்கிறார்கள் .

ஆகையால் குப்பை என்று எதையும் ஒதுக்காதீர்கள் .
மஹா விஷ்ணு உலகி காக்க வராக அவதாரம் எடுத்தார் . வராகத்தின் வம்சாவளிகள் குப்பை மேட்டில் மேயிகின்றனர். அப்பொழுதே தெரிந்துவிட்டது குப்பையில் செல்வம் ஒளிந்து இருக்கிறது என்று .

தவமாய் தவமிருந்து ....

ஒரு பன்னாடைக்கு ஒரு பொன்னாடை பிறந்தது .நாளை அந்த பொன்னாடை பன்னாடையாக மாறுமா அல்லது பொன்னாடையாக தொடருமா என்பது கடவுளுக்கு தான் தெரியும். எங்கையோ ஒரு பட்டு ஒலிக்கிறது " எந்த குழந்தையும் நல்ல குழைந்தை தான் மண்ணில் பிறக்கையிலே அவள் நல்லவள் ஆவதும் தீயவள் ஆவதும் அன்னை வளர்ப்பதிலே ".

Monday, March 22, 2010

நான் ஷாக் ஆகி விட்டேன் ....

சமீபத்தில் சினிமா பார்க்க சென்று இருந்தேன் . இண்டர்வல் சமையத்தில் ஒரு அம்மா மற்றும் குழந்தைக்கு இரண்டு பாப் கார்ன் பாக்கெட்டை வாங்கி தந்தார் குடும்ப தலைவர். அம்மா தன் பாக்கெட்டை சீக்கிரம் தின்னி தீர்த்து விட்டு குழந்தையின் பாக்கெட்டை பிடுங்கி தின்னாள். இதை பார்த்து நான் ஷாக் ஆகி விட்டேன் .

கெட்டு போவது உறுதி

ஒரு சிலர் திருமணத்திற்கு முன் கெட்டு விட்டு கல்யாணம் செய்து கொண்டு செட்டில் ஆகுவார்கள். பலர் கல்யாணத்திற்கு பின் கெட்டு விட்டு செட்டில் ஆன வாழ்கையை unசெட்டில் செய்து கொள்கின்றனர்.

ஒன்று மட்டும் உறுதி "கெட்டு போவது உறுதி".

Sunday, March 21, 2010

பேரம் படியவில்லை ....

ஒரு புது வியாபாரம் பிடிக்க பொறுமை தேவை. அவசரத்தில் எதாவது செய்தால் நமக்கு தான் நஷ்டம். அடுத்தவன் அவசரபடுத்துவான் அதுக்யெல்லாம் வளைஞ்சி கொடுத்தா வியாபாரத்தை முடிக்க வேண்டியது தான்.

Saturday, March 20, 2010

வடாம் போடுவது .....

இந்த பங்குனி மற்றும் சித்திரை மாதங்களில் மாம்பலம் மாமிகள் வெயிலை வீண் செய்ய மாட்டார்கள் . மாடியில் வடாம் போட்டு அன்று மாலையே பொறிச்சி சாப்பிடவேண்டும்.

சிலர் அக்கும் பக்கத்தில் உள்ள கடைகளில் விற்று சம்பாதிப்பார்கள் . வடாம் காயும் பொழுது அணில்,காக்கா வராமல் இருக்க வீட்டில் உள்ள குழந்தைகளை காவல் காக்க வைப்பார்கள். இந்த குழந்தைகள் சும்மா இருக்க மாட்டார்கள் . காவல் காக்கும் சமையும் வடாத்தை கில்லி வாயில் போட்டு கொள்வார்கள்.

அளவா பேசு.....

அதிகும் பேசினால் பேரம் படியாது. அதனால் அளவா பேசி வியாபாரம் பண்ணுங்கோ ! சிலர் இருகிறார்கள் பேசாமலே கப்சா விட்டுக்கொண்டு ஊரை ஏமாற்றிக்கொண்டு திரிகிறார்கள் .

Friday, March 19, 2010

ஜென்ம பந்தம் என்று இதை தான் சொல்வது ....

இது அல்லவா தியாகம் .......

போயும் போயும் இதுக்கா ....

உன்னால் முடிந்தது....

ஒரு விஷயம் நமக்கு புரியவில்லை என்றால் அட்லீஸ்ட், மற்றவர்களை குழப்பிவிடுவது நமது வெற்றியின் ரகசியம். அது எப்படி நாம் உருப்படவில்லை என்றால் மற்றவரை உருப்படவிடுவது.

ஒருத்தரை குடிகாரனக்குவது எப்படி?

நீ அவனுக்கு நாலு நாள் குடி வாங்கி தா . மறு நாள் அவன் பாக்கெட்டில் இருந்து அவனே செலவு செய்வான்.

இதை தான் உறவுக்கொண்டு கெடுப்பது .

Thursday, March 18, 2010

நில் கவனி செல் .......

எதையும் கண்டுகொள்ளாமல் இருக்க கூடாது. சுற்றி நடப்பதை லேசாக கவனிக்க வேண்டும் ஆபோழுது தான் நாம் வரும் சிக்கலை செம்மையாக கையாள முடியும்.

எடை போடு ...

நீ வாங்குகிற பொருளை மட்டும் எடை போடாதே. உன்னிடும் பழகுகிற மனிதரையும் எடை போடு. ஆனால் ஒன்று நீ எடை போடுவதை காட்டி கொள்ளாமல் அந்த நபரை கணக்கு பண்ணு.
இதை தான் ஒவ்வொரு மனிதனனுக்கு குள் ஒளிந்து கிடக்கும் இன்னொன்று மனிதன்.

Tuesday, March 16, 2010

நாம் உஷாராக இருக்க வேண்டும்......

ஏமாற்றாதே ஏமாற்றாதே ஏமாறாதே ஏமாறாதே என்று பாடல் உண்டு. கொஞ்சம் பதட்டம் காட்டினால் போதும் நம்மை சுற்றி இருப்பவர்கள் நம் தலையில் மிளகாய் தேய்க்க தயாராக இருக்கின்றனர். ஆகவே , நாம் தான் உஷாராக இருக்க வேண்டும் . உன்னை சொல்லி குற்றம் இல்லை என்ன சொல்லி குற்றம் இல்லை ! என்று மற்றொரு பாடலும் உண்டு.

அனுபவித்து பார் ....

கடவுள் எங்கே என்பதை கேட்பது இப்பொழுது ஒரு பேஷன் . கடவலை உணர தான் முடியும். கடவுளை பார்க்க முடியாது. அதனால் தான் கடவுளை பல அவதரபுருஷர்களாக பார்க்கிறோம் . நீ செய்யும் எல்லா காரியங்களிலும் அவன் உன்னோட இருப்பதை உணறு.

திருமனத்திற்கு முன் ....

பெண் வீட்டார் பெண்ணை நாய் பராமரிப்பு மையத்தில் பயிற்சிக்காக அனுப்புகின்றனர்.

ஆண் வீட்டார் தன் மகனை மனநல காபகத்திற்க்கு பயிற்சிக்காக அனுப்புகின்றனர்.

இரண்டு குடும்பங்களும் செய்வது சரியே .

என்னென்றால் கல்யாணத்திற்கு பிறகு வாழ போவது அவர்கள் மட்டுமே ஆகையால் எதற்கும் ஒரு பயிற்சி தேவை. ஆப்பொழுது தான் ஒருவரை ஒருவர் அனுசரித்து வாழ்வை தொடர்வார்கள் .

குழப்பத்தில் மீன் பிடி .....

நீ முன்னேற வேண்டுமானால் குழப்பத்தில் திறமையை வெளிப்படுத்து . யாருக்கும் உதிக்காத யோசனை உன் திறமையால் வெளிப்படுத்து .யார் என்ன சொன்னாலும் இந்த காதில் வாங்கி அந்த காதில் விடு. ஊரில் ஒரு பழமொழி சொல்லுவாங்க '' ஏரிக்கு பயந்து நீச்சல் அடிக்காமல் இருக்காதே''.

Monday, March 15, 2010

ஒரு பழமொழி

வர வர மாமியார் கழுதை போல் அனாலாம் ஊராண்டை வரச்ச ஊளை இட அரம்பிதாலம்
கழுதை தேய்ந்து கட்டெறும்பானது.
கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை.
பொதி முட்ட சுமக்கர கழுதை.
காம்போதி ராகம் பாடும் கழுதை.

யார் சொன்னது ........

மண்டை பலம் இல்லாத இக்காலத்தில் வாழ்வது மிகவும் கடினம். ஒரு மனிதனை சுற்றி எவ்வள்வு தொல்லைகள் இதன் இடையில் வாழ்வது என்பது ரொம்போ கஷ்டம். ஸ்லிப் ஆன சிதறி விடுவாய்......மைன்ட் இட்...........

நம்பிக்கை...

மனிதனாக பிறந்தால் எது மீதாவது நம்பிக்கை வைக்க வேண்டும். எனக்கு நம்பிக்கை எல்லை என்று சொன்னால் அட்லீஸ்ட், அது மீதாவது முழு நம்பிக்கை வேண்டும். நம்பிக்கை இல்லாத வாழ்கை அர்த்தமற்றது வாழ்கையின் போக்கை ருசி இல்லாமல் செய்துவிடும். இப்பொழுதாவது நம்பிக்கை இருக்கா ........ப்ளீஸ் சொல்லுப்பா.

Sunday, March 14, 2010

காரியவாதி...

உன்ன்யிடுமிருந்து என்ன லாபம் எனக்கு கிடைக்கும் அதை மட்டும் பார்த்து கொள் மற்றதை பற்றி கவலை படாதே . யார் எப்படி போனால் நமக்கு என்ன ?

Saturday, March 13, 2010

எதையும் தெரியாமல் ....

எதற்கும் ஓகே சொல்வது நம் கையில் ஆகாத தனத்தை கட்டுவது. முதலில் எதற்கும் நோ சொல்லி பழகங்கள் அப்பொழுது தான் மற்றவர் நம்மை மதிப்பார்கள். பின் விளைவுகளை பற்றி சிறிதும் சிந்திக்காமல் எஸ் !எஸ்! என்று சொன்னால் நண்பர்களால் நம்மக்கு சுட்ட படும் பட்டம் "இளிச்சவாயன்". ஆகையால் இப்பொழுதே நோ நோ என்று சொல்லி பழகுங்கள்.

திறமை உள்ள பசங்க .....

இப்பொழுதெல்லாம் இரவு ஒன்பது மணி என்றால் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிதான் எங்கள் விட்டின் நிக பிடித்தமான நிகழ்ச்சி . குழந்தைகளின் திறமை பிரமாதம். ஒரு பக்கம் சந்தோஷம் என்றால் மறு பக்கம் ஒரு ஏக்கமும் உண்டு. ஏனென்றால் இந்த குழந்தைகள் அதிகமாக எக்ஸ்போஸ் பண்ணி பிற்காலத்தில் பின் தங்க கூடாது . அவர்களக்கு அதிகம் அழுத்தம் தந்து அந்த பிஞ்சு உள்ளங்களை பலவீன படுத்தாமல் இருக்க வேண்டும்......

Friday, March 12, 2010

அவசரம் கூடாது

சென்னை நகரில் குழந்தைகளைக்கு பள்ளி செல்ல மூன்று சக்ர வண்டி மற்றும் சைக்கிள் பயன்படுத்துகின்றனர் . ரோட்டில் செல்லும் பொழுது குழந்தைகள் வயசு காரணமாக மிக வேகத்தில் வண்டி ஓட்டுகின்றனர் . அதுவும் ஸ்கூல் விட்டால் போதும் ஒவ்வொரு மாணவனும் தன்னை ஒரு ஹீரோ என்று கருதி பஸ்சில் செய்யும் சேட்டை பயங்கரம்.

Thursday, March 11, 2010

போதை மனிதனுக்கு அவசியம்தான்...

இவ்வுலகில் பிறந்த அனைவருக்கும் ஏதோ ஒரு போதையில் சிக்கி வாழ்க்கயை நடத்திக்கொண்டு இருக்கிறோம் . போதை நம் கட்டு பாட்டில் இருந்தால் நம் வாழ்கை இனிக்கும் . அதே நாம் அதன் கட்டுப்பாட்டில் இருந்தால் வாழ்வு ஆபத்தை நோக்கி செல்கிறது என்று அரத்தம். எதிலுமே ஒரு லிமிட் தேவை மச்சி .

Wednesday, March 10, 2010

என் வழி சீனா வழி ......

நட்பு நாடாவுது எதிரி நாடாவுது தன வெளிஉறவு கொள்கையில் சுயநலத்தில் மட்டும் சிந்தனை கொண்டு உள்ள நாடு சீனா . அதன் வளர்ச்சியில் உத்வேகம் காட்டுவதால் உலகில் எந்த நாடும் அதை கண்டு ஐயம் கொள்கிறது.

நாமம் நம் வளர்ச்சியில் மட்டும் கவனம் செலுத்தினால் நம்மை கண்டும் நம் எதிரிகள் ஒரு அடி தள்ளி செல்வார்கள்.

நீ நீயாக இரு ....



சிங்கம் மாதிரி இருந்து புனை மாதிரி கத்தினா அது அழுகு இல்லை. நாய் போல் இருந்து கர்ஜனை செய்தால் நாய்க்கு அழுகு இல்லை. நல்ல பாம்பு போல் இருந்து கட்டெறும்பு போல் கடித்தால் அதற்கு அழகு இல்லை. நான் நானாக இருக்கிறேன் . நீ நீயாக இரு.

உன்னை நீயே புரிந்து கொள்வதற்கு ஒரு ஜென்மம் போதாது. நீ அடுத்தவரை புரிந்து கொள்ள எப்படி முடியும். கிரௌண்ட் யௌர்ஸெல்ப்! பேபே!

வம்பு இல்லாத வாழ்கை .....

எனக்கு வன்பு பேசாதே நாள் நரகம் என்பேன் . சும்மா ஒருவரை பற்றி அவருககு முன்னால் பேசாமல் அவருக்கு பின்னால் பேசுவது ஒரு ஜென்டில்மேனின் குனாதசியம் .ஒரு நாள் வம்பே இல்லாமல் போனால் அன்று பொழுது போகாமல் ஒரு வித தவிப்பு உருவாகும்.

நீ இப்படி ஆக வேண்டும் .......

Tuesday, March 9, 2010

உல்லாசம் உனக்கு உள்ளே ........

சும்மா சந்தோஷத்தை வெளியில் தேடுவதை நிறுத்து. ஒரு கஷ்டம் வரும் பொழுது தான் தெரியும் யார் உண்மையானவன் யார் பொய் என்று . ஒரு கல்லை விட்டு எறிந்தால் காக்கா கூட்டம் பறந்துவிடும் அதே போல் நம்மை சுற்றி உள்ளவர்களும் பறந்து விடுவார்கள். அதனால் இந்த சிறு நேர சந்தோஷத்திற்கு உன் வாழ்வை வீண் அடிக்காதே.

உன்னிப்பா கவனி .....

உன்னை சுற்றி என்ன நடக்கிறது என்று என்பதை நீ உனிப்பா கவனி . அப்பொழுது தான் நீ செய்யும் கேப் மாறி தனம் யாருக்கும் தெரியாமல் பார்த்து கொள்ளலாம். இல்லை என்றால் அடுத்தவன் உன் வாழ்க்கையில் ஆட்டயை போட்டுவிடுவான்.

அமுக்கி வாசி .......

இந்த உலகத்தில நடக்கிறது பற்றி எல்லாம் தெரிஞ்சிக்கோ ஆனால் நம்மை பற்றி மட்டும் யாருக்கும் தெரியாமல் பார்த்து கொள் . இதே கோதாவில் எல்லா காரியங்களை செய்து முடி. அதற்க்குன்னு கூலி பட்டாளும் சேவை செய்யவே இருக்கு பயன் படுத்தி கொள்.

Monday, March 8, 2010

ஐயோ போச்சே ......

ரொம்போ அடுத்தவனுக்கு உதவி செய்தால் அப்புறம் அய்யோ போச்சே என்று கத்த வேண்டும். அதனால் உதவி சேவை என்று சுத்தமால் நம்ம உண்டு நம்ம வேலை உண்டு என்று சுற்றவேண்டும்.

இது எனக்கு தேவையா .......

பழனிக்கு வந்தோமா சாமிய பார்தோமா கம்முனு போகனும் . சும்மா அடுத்தவனுக்கு அட்வைஸ் கூடுக்ககூடாது . என்னா நாங்க எல்லாம் கரும் சிறுத்தை !

தம்பி வரட்டம்மா !

கண்ணா லட்டு தின்ன ஆசையா.......

ஒரு எலி மிக சுதந்திரமாக சுற்றி திரிஞ்சிக்கொண்டு இருந்தது. இதை கண்ட மற்ற மாட்டி கொண்ட எலிகள் இந்த (சுதந்திர) எலியை எப்பிடியாவுது மாட்டி விட பிளான் செய்தது. ஒரு எலி பொறியில் லட்டு ஒன்றை வைத்து காத்துக்கிடந்தது . (சுதந்திர) எலியும் லட்டு தின்ன எலி பொறியின் அருகில் சென்றது.

அப்பொழுது ஒரு பிளாஷ் "கண்ணா லட்டு தின்ன ஆசையா " . தின்ன அப்புறம் கஷ்டப்படுவது யார். அது மட்டும் இல்லை ஒரு வேலை அந்த லட்டுவில் விஷம் தடவி வைத்திருந்தால் உயிர்க்கே ஆபத்து . ஜுட் .........எஸ்கேப் ........டாட்டா மாமி .......

ஏன் இந்த வம்பு ......

சிலர் நம்மை சுயநலவாதி என்று அழைப்பார்கள் . அதை பற்றி எல்லாம் கவலை ப்டக்கூடாது கஷ்டம் படும் பொழுது எந்த கொம்பன்னும் உதவிக்கு வர மாட்டன். அது மட்டும் இல்லை கசட்டில் எழுது விடுவதற்கு பல சக்திகள் வரும் ஆனால் உடுவிக்கு இல்லை. ஆகையால் எந்த வம்பும் வேண்டாம்.

விருதுகளை தேடி...

வாழ் நாளில் விருதகளை தேடி அலைவதே ஒரு பெரும்பாடு . இப்போளுதுஎல்லாம் குழந்தைகள் முதர் கொண்டு எல்லோரும் விருதுகளை துரத்கின்றனர் . ல்.கே.ஜி. குழந்தைகளுக்கு விருது வழங்கம் விழா அதற்கு பெற்றோர்கள் படும் பாடு அதுவே ஒரு அலாதி .

ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும் இந்த விருதுகளின் ஆயுள் காலம் எவ்வளவு ? ஒன்றுக்கும் உதவாத இந்த விருதுக்கு பெற்றோர்கள் ஏன் காசு செலவு பண்ணவேண்டும்.

Sunday, March 7, 2010

எதற்காக இந்த ஆர்பாட்டம் ......

சாதாரனமாக சிந்திப்பதே அல்லது வாழ்வதே ஒரு மட்டமான வாழ்வு என்று ஒரு எண்ணம் உள்ளது. இதில் மாற்றும் தேவை. எதற்கு எடுத்தாலம் ஒரு பந்தா தேவையில்லாத ஆடம்பரம். எல்லாவற்றையும் ஒரு பதட்டத்துடன் பார்பதே நம் வேலையாகி விட்டது.

நான் ஒரு முட்டாள் ...

என்று பெயர் எடு. அப்புறம் உன் வித்தைகளை காட்டு. ஏனென்றால் அப்பொழுது தான் உன் மீது எந்த அழுத்தம் இருக்காது. நீ ஒரு அறிவாளி என்று முத்தரை வாங்கினால் உன்னால் எப்போழுதும் ஒரு அழுத்தம் உன்னை தடுக்கும் ஆகையால் முட்டாள் என்று பெயர் உசிதமாக இருக்கும்.

Saturday, March 6, 2010

யார் தயவும் தேவையில்லை

பக்தி என்பது உனுக்கும் உன்னை படைத்தவனுக்கும் இடையல் மட்டும் இருக்க வேண்டுமே தவிர இதில் எந்த கொம்பனும் தலையிட அனுமதி இல்லை. ஆகையால் , நம்பிக்கையை தளர விடாதே .

எந்த பக்கமும் சாயாதே..

நடப்பது எல்லாம் நன்றாக கவனி. உன்னோடு ரியாக்டியன் என்ன என்பதை வெளி காட்டிகொள்ளாதே. எல்லாம் ஒரு சதி . நீ உன் வேளையில் முழு கவனும் மழி அடிக்கும் விளையாட்டு. சும்மா நடப்பதை கவனி.

Friday, March 5, 2010

எட்டு கால் பூச்சி மாதிரி ....

இதன் குணாதசியம் வலையை பின்னி ஒதுங்கி விடவது . இதை அறியாத மற்ற பூச்சிகள் வலையில் மாற்றி கொள்வது. இதை போல் மனிதனும் மற்றவர் விரித்த வலையில் மாற்றிக்கொண்டு விதியை நொந்துக்கொள்கிறான்.

இதனால்தான் ஒரு மகான் சொன்னார் "ஏழு மீன் விழி மீன் " எபோழுதும் விழிப்புணர்வுடன் இரு. இதை விட்டால் மனிதனுக்கு வேறு வழி இல்லை.இதுவே தலை சிறந்த ஆன்மிகத்தின் அடித்தளம் .

Thursday, March 4, 2010

வரும் தொல்லையை திருப்பி அனுப்பு

உன்னை பாதுகாக்க உனக்கு சகல உரிமையும் உண்டு . உனக்கு கூடக்கபடும் தொலையை நீ சமாளித்து. தொல்லை கொடுத்தவவர்கே தொலையை கொடு.

உன்னால் எனக்கு என்ன பயன் ....

இந்த காலத்தில் எல்லா விஷையங்களுக்கும் ஒரு விலை நிறனையும் செய்யப்பட்டுள்ளது . காரணம் இல்லாமல் எந்த காரியும் இல்லை. நான் உனக்கு உதவதால் எனக்கு என்ன லாபம் . சும்மா எந்த காரியமும் செய்வது "கேனையன்" என்று பெயர் வாங்க்வீர்கள் . கால் மீ தொட்டி பெ மீ ஃபார்ட்டி.

அவள் கனவில் யார் வருவான் ...

நம்பிக்கை துரோகம் என்பது இப்பொழுது எல்லாம் மிக சாதரணமாக போய்விட்டது. யாரயும் நம்பவதர்க்கு நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது . நாம் நல்லதே நினைப்போம் அனால் நம் எதிரி நம்மை பற்றி என்ன நினைக்கிறான் என்று நாம் அவன் மேல் ஒரு கண்ணை வைக்கவ்ம்.

வேலியே பயிரை .....

நம்பிக்கையை உடைக்க பல வழிகளை கையாள்வது பல உண்டு. இது பல ஆண்டுகளாக தொன்றுதொட்டு வருகிறது. இது பனங் காட்டு நரி எந்த சலசலப்புக்கும் அஞ்சாது.

Wednesday, March 3, 2010

ஜாக்கிரதை உலகம் பொல்லாதது

ஒரு திரை பட பாடலின் வரி " கெட்டி யாக இல்லாட்டி மனசு கெட்டுடுமே". மற்றவர்களை குறை சொல்வதை விட்டுவிட்டு நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

உலகம் கொழுப்பின் பிடியில் .....

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவிற்கு கொழுப்பு அளவு மிகுதியாக உள்ளது. அதனை குறைக்கும் மாறு டாக்டர்கள் அலோசனை கூறி உள்ளனர்.

பொதுவாகவே உலகத்தில் கொழுப்பு கொஞ்சம் எல்ல்லோருக்கும் அதிகமாக இருக்கிறது. ஒரு பக்கத்தில் கொழுப்பு மறு பக்கத்தில் பட்டினி ஆக மொத்தம் யாருமே மிதமாக சாப்பிடவது இல்லை.

Monday, March 1, 2010

பேச்சு பேச்சா இருக்கணும் ...

நம் எதிரி நம்மை அவ்வபொழுது நம்மக்கு தொல்லை கொடுப்பான் ஆனாலும் நாம் அவனிடம் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். ஏன் என்றால் நாம் கையில் ஆகாதே தனம் அவனுக்கு ஒரு வர பிரசாதம்.

பில்டிங் ஸ்ட்ரோங் பேஸ்மென்ட் வீக்...

அந்த நேரத்துக்கு காசு பண்ணா போதும். சுப்ஜெக்ட் பற்றி தெரிஞ்சிக்க அவசியம் இல்லை. எல்லாமே கட் அண்ட் பேஸ்ட் உலகம் தான்.

சுப்ஜெக்ட் பற்றி இன் அண்ட் அவுட் தெரிஞ்சி என்ன பயன். அதை பற்றி விவாதிக்க எந்த ஒரு ஆளுக்கும் போதிய அறிவு இல்லை.